ETV Bharat / state

சந்து கடையில் மது விற்பனைக்கு போலீஸ் சர்போர்ட்..? எஸ்ஐ ஒருமையில் பேசிய வீடியோ!

author img

By

Published : Dec 4, 2022, 12:30 PM IST

மதுக்கடை விவகாரத்தில் பொதுமக்களுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்துவதை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை, எஸ்ஐ தரக்குறைவாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கள்ள சந்தையில் மதுவிற்கிறதா காவல்துறை..? எஸ்ஐ பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
கள்ள சந்தையில் மதுவிற்கிறதா காவல்துறை..? எஸ்ஐ பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

திருச்சி: சோபனாபுரத்தில் பள்ளிக்கூடம் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி, சோபனாபுரம் பகுதி பொதுமக்களால் திங்கள்கிழமை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து துறையூர் வட்டாட்சியர் புஷ்பராணி தலைமையில் இன்று பொதுமக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை உப்பிலியபுரம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் ஒருமையில் பேசி வெளியே அனுப்பியுள்ளார். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தை முடிந்த பின்பு வெளியே வந்த உதவி ஆய்வாளரிடம் உப்பிலியபுரம் பகுதியில் மது பாட்டில்கள் கள்ளச் சந்தையில் விற்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கள்ள சந்தையில் மதுவிற்கிறதா காவல்துறை..? எஸ்ஐ பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

அப்போது ஆத்திரமடைந்த காவல் அதிகாரி, செய்தியாளர்களை மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். மேலும் இன்ஸ்பெக்டர் அமைதியாக இருக்கும்படி கூறியும் எஸ்ஐ எகிறிப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கைதிகளை அடிக்காமல் விசாரணை.. அமெரிக்கா பாணியில் கொல்கத்தா போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.